Star24. மகிழ்ச்சியாய் இரு மனிதா!
எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்
************************************
பல நேரங்களில் நம்மை நாமே தேற்றிக் கொள்கிறோம், நம் வாழ்வு சுகமாகும் -- நமக்கு திருமணமானால் ... ஒரு குழந்தை பிறந்தால் என்று!
அதன் பின், குழந்தைகள் வளர்ந்து ஆளாகும் வரை விரக்தி -- அவர்கள் வளர்ந்து ஆளாகி விட்டபின் எல்லாம் சிறப்பாக அமையும் என்று நினைத்துக் கொள்கிறோம்!
நம் மனைவிகள்/கணவர்கள் இன்னும் சற்று விட்டுக் கொடுப்பவராக மாறினால் .. நம்மிடம் இன்னும் சற்று பெரிய கார் இருந்தால் ... எங்கேயாவது நீண்ட விடுமுறைக்குச் சென்றால் ... நாம் பணி ஓய்வு பெற்றால் ... நம் வாழ்க்கை சரியாகி விடும் என்று ஒருவித பிடிவாதத்துடன் விடாமல் எண்ணிப் பார்க்கிறோம்!
ஆனால், மகிழ்ச்சியாக இருப்பதற்கு நிகழ்காலத்தை விட சிறந்த சமயம் இல்லை என்பது தான் உண்மை. நம் வாழ்வில் போராட்டங்களும், சங்கடங்களும் இருப்பதை ஒப்புக் கொண்டு, அவற்றையும் மீறி மகிழ்ச்சியாக இருக்க முடிவெடுக்க வேண்டும்!
இந்த தடங்கல் விலகிய பின் ... இந்த கஷ்டம் தொலைந்த பின் ... இந்த வேலை முடிவடைந்த பின் .... என் இனிய வாழ்வு தொடங்கும் என்று பல சமயங்களில் எண்ணியிருக்கிறேன். ஆனால், அந்தத் தடங்கல்கள், கஷ்டங்கள், வேலைகள் ஆகியவை அடங்கியது தானே வாழ்வு என்பது ஒரு வழியாக புரிந்தது!
இப்படியான கண்ணோட்டம் ஒன்றைத் தெளிவுபடுத்தியது. மகிழ்ச்சிக்கென்று தனியாக பாதை ஒன்று கிடையாது, மகிழ்ச்சி தான் அந்தப் பாதையே!
ஆகவே, நண்பர்களே,
வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாக செலவழியுங்கள்!
படிப்பு முடிவதற்கோ, மீண்டும் பள்ளி செல்வதற்கோ, எடை குறைவதற்கோ / கூடுவதற்கோ, குறிப்பிட்ட பணி தொடங்குவதற்கோ, வெள்ளி மாலைகளுக்கோ, ஞாயிறு காலைகளுக்கோ, புதிய கார் வாங்குவதற்கோ, கடன் அடைவதற்கோ, கோடை / குளிர் காலம் வருவதற்கோ, மாதத்தின் ஏதாவது ஒரு தேதிக்காகவோ, மரணத்துக்காகவோ, மீண்டும் பிறப்பதற்காகவோ ... காத்திருக்கிறேன் என்று கூறிக் கொண்டு மகிழ்ச்சியை தள்ளிப் போடாதீர்கள்!
மகிழ்ச்சி என்பது ஒரு பிரயாணம், சேரவிருக்கும் இடமல்ல! இந்தத் தருணத்தை விட மகிழ்ச்சியாக இருக்க சிறந்த தருணம் இல்லை என்றெண்ணி வாழ்க்கையை நடத்துங்கள்!
**********************************
எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்
2 மறுமொழிகள்:
good one ...
good one ...
Post a Comment